பகவான் ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாக அவதாரம் செய்யும் போதும் தன் அப்ராக்ருத திருமேனியோடுதான் அவதாரம் செய்தார் என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனின் திருமேனிக்குக் காரியம் செய்தான் என்று மஹாபாரத மௌசல்ய பர்வத்தில் சொல்லப்பட்டு உள்ளதாகப் படித்தேன். இதற்கு ஏதாவது விளக்கங்கள் உள்ளனவா?

பெருமாள் எங்கேயும் தம் அப்ராக்ருத ஸ்வபாவத்தை விடுவதில்லை. அப்ராக்ருத திருமேனியோடு என்றால் சங்கு, சக்ர, கதாதாரியாக தான் எம்பெருமான் திருவவதாரம் பண்ணுகிறான். மஹாபாரத மௌசல்ய பர்வாவில் உள்ளது என்றால், ப்ராக்ருதமான ஶரீரத்தை விட்டு, தன் அப்ராக்ருதமான திருமேனியோடு தன்னடிச்சோதிக்கு ஏளிவிட்டார் என்றர்த்தமாகும். அர்ஜுனன் அந்த ப்ராக்ருதமான திருமேனிக்குச் செய்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top