1) பூக்கும் செடிகளில், எங்கள் வீட்டில் செம்பருத்திச் செடி மட்டுமே உள்ளது. செம்பருத்திப் பூவை பூச்சூட்டலின் போது பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்கலாமா? 2) “தாழ் சடையும் நீள் முடியும்” என்ற பேயாழ்வாரின் பாசுரத்தின் உண்மையான பொருள் என்ன? 3) “தாள தாமரையான் உனது உந்தியான்” என்னும் திருவாய்மொழி பாசுரத்தில் ஆழ்வார் “வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்”, என்று சிவன் ஸ்ரீமன் நாராயணனின் திருமேனியின் ஒரு பகுதியில் இருப்பவன் என்று கூறுகிறார். இந்தக் கருத்து, சைவர்கள் கூறும் சங்கர நாராயண வடிவத்துடன் ஒத்துப் போவது போல் உள்ளதே. இதற்கு நம் ஆச்சரியார்கள் ஏதாவது விளக்கங்கள் அளித்துள்ளார்களா? 4) பகவானைப் போலவே சக்கரத்தாழ்வாரும் நித்யமானவர் என்பது இருக்க, ஸுதர்சன ஜெயந்தி என்பது எந்த நாளைக் குறிக்கிறது?

செம்பருத்திப்பூவைப் பொதுவாகச் ஸமர்ப்பிப்பதில்லை.
இந்தப் பாசுரத்தின் பொருளைப் பிறகு விரிவாகச் சொல்கிறோம். அவன் அந்தர்யாமியாக இருக்கிறான் என்றர்த்தத்தில்தான் வரும்.
எல்லாவிடங்களிலும் ப்ரம்மாம்சம் இருக்கிறப்படியினால் “உன் ஆகத்தான்” என்றால், பெருமாளின் ஒரு பகுதியில் சிவன் இருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். இதையும் விரிவாகப் பிறகு சொல்கிறோம்.
இவர்கள் நித்யசூரிகள்தான் என்றாலும், ஸ்ரீராம க்ருஷ்ண ஜயந்தி போல் திருவாழியாழ்வானும் ஒரு கல்பதில் அவதாரம் பண்ணியிருக்கிறார் அதை ஸ்ரீஸுதர்சன ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top