அகத்திலே புழுக்கி வைத்த நெல்லிருந்து புழுங்கலரிசி தயாரிப்பது என்பதுதான் உத்தம கல்பம். அதுதான் சிஷ்டர்களின் க்ருஹங்களில் வழக்கமாக இருந்திருக்கிறது. இன்றும் சில க்ருஹங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் ஶ்ரமமான கார்யமாக இருப்பதினால் இன்று பெரும்பாலான க்ருஹங்களில் இவ்வழக்கமில்லை என்பது உண்மை.
உத்தமமான கல்பம் என்பது அகத்திலே தயாரித்து அதன் மூலம் செய்த பதார்த்தங்களை உபயோகிப்பதுதான். அது இயலாதவர்களுக்கு அவர்களால் இயன்றதைச் செய்வது என்பதும் வழங்கத்தில் இருக்கிறது.