முன் காலத்தில் அகத்தில் நெல் புழுக்கி காயவைத்து புழுங்கல் அரிசி கிடைக்கும். தற்போது அந்த வசதிகள் இல்லை. கடையில் புழுங்கல் அரிசி வாங்கிச் செய்யும் பதார்த்தங்களைப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா?. (பெருமாளுக்குக் கூடாது என்றால் நாமும் உபயோகிக்க முடியாது)

அகத்திலே புழுக்கி வைத்த நெல்லிருந்து புழுங்கலரிசி தயாரிப்பது என்பதுதான் உத்தம கல்பம். அதுதான் சிஷ்டர்களின் க்ருஹங்களில் வழக்கமாக இருந்திருக்கிறது. இன்றும் சில க்ருஹங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் ஶ்ரமமான கார்யமாக இருப்பதினால் இன்று பெரும்பாலான க்ருஹங்களில் இவ்வழக்கமில்லை என்பது உண்மை.
உத்தமமான கல்பம் என்பது அகத்திலே தயாரித்து அதன் மூலம் செய்த பதார்த்தங்களை உபயோகிப்பதுதான். அது இயலாதவர்களுக்கு அவர்களால் இயன்றதைச் செய்வது என்பதும் வழங்கத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top