தாயார் பரமபதித்த பின் நாம் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஶ்ராத்தம் பண்ணுகிறோம். ஆனால் ஶ்ராத்தாங்க தர்ப்பணம்தான் பண்ணுவதில்லை ஏனென்றால், அந்தத் தர்ப்பணம் செய்யும் யோக்யதை (தகுதி) பிதா பரமபதித்த பிற்குதான் நமக்குக் கிடைக்கிறது. அதுவரை அந்த ஜீவனுக்கு தகுதியுடைய ஜ்ஞாதாகள் தர்ப்பணம் செய்வார்கள். “ஜ்ஞாதா அஜ்ஞாதா பித்ருப்ய:”