நாம் பொதுவாக தாயார் உயிருடன் இருக்கும்போது, பிதா பரம்பதித்த பின்னர் அவருக்கு ஶ்ராத்தாதிகள் எல்லாம் பண்ணுகிறோம். ஆனால் பிதா இருக்கும்போது , தாயார் பரமபதித்து விட்டால் அவருக்கு ஶ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை ஏன் செய்வதில்லை. அவர்கள் பித்ரு லோகம் அடைந்தபின் அவருக்கு எள் மற்றும் ஜலம் தேவைப்படாதா? அடியேனுக்கு இக்கேள்வி பல காலமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்தது, அவர்தான் நமக்கு ஜனனம் தந்து பல த்யாகங்கள் செய்தவள்.

தாயார் பரமபதித்த பின் நாம் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஶ்ராத்தம் பண்ணுகிறோம். ஆனால் ஶ்ராத்தாங்க தர்ப்பணம்தான் பண்ணுவதில்லை ஏனென்றால், அந்தத் தர்ப்பணம் செய்யும் யோக்யதை (தகுதி) பிதா பரமபதித்த பிற்குதான் நமக்குக் கிடைக்கிறது. அதுவரை அந்த ஜீவனுக்கு தகுதியுடைய ஜ்ஞாதாகள் தர்ப்பணம் செய்வார்கள். “ஜ்ஞாதா அஜ்ஞாதா பித்ருப்ய:”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top