தாமஸ புராணங்களில் இதுபோல் விஷயங்கள் வரும். அவை அந்தப் புராணம் படிப்பவர்களை மோகிப்பதற்கு அல்லது அவர்கள் திருப்திக்காக எழுதப்பட்டவை. நாம் படிக்கக் கூடாது. ஶ்ரீமத் இராமாயணத்தில் சிவன் போல, இந்திரன் போல என்றெல்லாம் வரும். இது ஒரு எடுத்துக் காட்டாக சிறப்பைச் சொல்ல வந்தது. மனிதர்களான நமக்கு விசேஷமாக புரிய வைப்பதற்காக இந்த எடுத்துக் காட்டு. விஷ்ணு போல இருந்தார் என்றும் குறிப்பு உண்டு.
சிவன் போல விபூதி அணிந்தார் என்று அங்குச் சொல்லவே இல்லை. விபூதி பற்றிய குறிப்புகள் பல புராண வசனங்களில் உண்டு. வேதத்திலும் இருக்கலாம். அவை சிவ பக்தர்களுக்கு வந்தவை. ஸாத்விகனுக்கு பஸ்மம் கூடாது என்று தெளிவாகச் சொல்லி இருப்பதால் நாம் அதை படிக்கக் கூடாது.
அத்யாத்ம ராமாயணமும் மொத்தமும் அப்படியே கொள்வது கூடாது. பூர்வாசார்யர் சொன்ன விஷயம் மட்டுமே ஏற்பது. மற்றவை சொல்லி இருந்தாலும் நமக்கு அல்ல
வேத புராணங்கள் பலருக்காக பலதும் சொல்லும்.