சில கோயில்களில் த்வஜஸ்தம்பம் வைக்க வசதியில்லை இல்லை அனாதியாகவே அவ்வழக்கமில்லை என்பன போல் பல காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், அது இல்லாத கோயில்களில் த்வஜஸ்தம்பம் இல்லை என்பதினால் ஒரு குறையும் இல்லை. த்வஜஸ்தம்பம் இல்லாத கோயில்களிலும் ப்ரம்மோத்ஸவம் நடக்கும், நித்யபடி பலி ஸமர்ப்பணம் போன்றவைகள் நடக்கும்.