ஸ்ரீமத் இராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் கணையாழியை அடையாளமாக அனுமனிடம் கொடுத்தார் என்றால், அவர் அயோத்தியில் இருந்து அனைத்தையும் ஆபரணாதிகள் உட்பட அனைத்தையும் துறந்தல்லவா ஆரண்யம் சென்றார்? இல்லை இந்த ஒரு ஆபரணத்தை மட்டும் தன்னுடன் எடுத்துச்சென்றாரா?

பெருமாள் கொண்டு சென்ற கணையாழி என்பது மற்றவை போல் ஒரு ராஜா அணியும் கிரீடம், மாலை, கைவளைகள் போன்ற ராஜாபரணங்கள் கிடையாது. இது பெருமாளுக்கும் தாயாரும் விவாஹ காலத்தில் அவர்கள் இருவருக்கும் தனிப்பட்டமுறையில் பரஸ்பரம் அணிந்த ஒரு ஆபரணம் என்று கொள்வது உசிதமாக இருக்கும்.
எம்பெருமான் இராஜாவின் ஆபரணங்களை எல்லாம் துறந்து, தனக்கேன்றுள்ள விசேஷ ஆபரணத்தை மட்டும், எப்படி பவித்திரம் போன்றவைகளோ அது போல் இதை பெருமாளும் பிராட்டியும் எடுத்துக்கொண்டு போனார்கள் என்று எடுத்துக்கொள்வதுதான் உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top