A. தசமி கலக்காத நாளில் ஏகாதசி வ்ரதம் இருக்கவேண்டும் என்றால், எப்படிப் புரிந்துகொள்வது? சூர்யோதய நாழிகையில் இருந்தா? அல்லது 12am முதலா? ப்ரஹ்மமுஹூர்த்தம் காலத்திலிருந்தா? தெளிவிக்கவும். B. மேலும் கர்நாடக தேசத்திற்கும், தமிழ்நாட்டில் பின்பற்றும் பஞ்சாங்கத்தில் பல வேறுபாடுகள் இருக்கின்றன குறிப்பாக ஏகாதசி வ்ரத அனுஷ்டான தினத்தில், அவை என்ன? ஏன் இந்த வேறுபாடுகள்? அடியேன் சித்தாந்த, வாக்கிய பஞ்சாங்கம் என்று இரண்டுவிதம் உள்ளது என கேள்விப்பட்டுள்ளேன் அதனால்தான் இவ்வித்தியாசங்களா? விளக்க வேண்டுகிறேன்.

உதயத்துக்கு முன் நான்கு நாழிகைக்கு தசமி சம்பந்தம் கூடாது. அதாவது முன் நாள் 56 நாழிக்கைக்கு மேல் தசமி இருந்தால் மறுநாள் ஏகாதசி வ்ரதம் கிடையாது.
தர்ம ஶாஸ்திர ஸ்ம்ருதி வசனங்களை அடிப்படையாக வைத்து விசாரம் செய்து பல விதமாக நிர்ணயம் செய்தனர். அதனால் சம்பிரதாய வித்தியாசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top