1.பஞ்சாங்கத்தில் ஒரு நக்ஷத்திரம் அல்லது திதி ஒரு நாளில் சில நாழிகைகள் இருக்கிறது. (உ.தா: ஸ்வாதி 28.01 அல்லது துவாதசி 15.00) சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாமா? உதாரணமாக “A” என்ற இடத்தில் சூரிய உதயம் காலை 6:30 மணி, “B” என்ற இடத்தில் 7:00 மணி. துவாதசி பத்து நாழிகை என்றால், “A” என்ற இடத்தில் 10:30 மணி வரையிலும் “B” என்ற இடத்தில் 11 மணி வரையிலும் துவாதசி இருப்பதாகக் கொள்ளலாமா? 2. மார்ச் 21 அன்று பஞ்சாங்கத்தின் படி ஏகாதசி திதியே இல்லை. அன்று துவாதசி 60 நாழிகை இருந்தும், நாம் ஏன் முதல் நாள் ஏகாதசி அன்வயிக்காமல் அன்றைய தினம் ஏகாதசி அன்வயித்தோம்?

1. வாக்ய பஞ்சாங்கம் பின்பற்றும் போது சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாம். சிலர் த்ருக் பஞ்சாங்கம் பின்பற்றுவர். அவர்களுக்கு வித்தியாசம் வரலாம்.
2. மார்ச் 21க்கு மறுநாள் துவாதசி கொஞ்சம் இருந்தது. அப்படி வந்தால், துவாதசி புச்சம் இருக்கும் தினம் பாரணை. முன் நாள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top