ப்ரபத்திக்கும் மோக்ஷத்துக்கும் சம்பந்தம் உண்டு. நித்ய கர்மத்திற்கும் மோக்ஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அது பொது விதி. நித்ய கர்மா செய்யாவிட்டால் பாபம் உண்டு. அதன் பலனை அனுபவித்த பின்னரே மோக்ஷம் கிட்டும். பொய் சொல்லுதல், திருட்டு போன்றவை பொது பாபங்கள். அதேபோல் நித்ய கர்மா செய்யாமை என்பதும் பொது பாபம். ப்ரபத்தி செய்தவன் பொய் சொல்லலாமா? திருடலாமா? வேறு பாபம் செய்யலாமா? என்றால் அது கூடாது, அதேபோலதான் இதுவும் கூடாது. மோக்ஷத்திற்கான ப்ரபத்தி செய்தல் விசேஷ தர்மம். அதற்காக, பொது தர்மங்களை மீறக் கூடாது.