அடியனுக்கு 57 வயது, என்னுடைய கணவருக்கு 60 வயது. எங்கள் இருவருக்கும் ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. பரந்யாஸம் செய்து கொள்ளப் போகிறோம். எங்களுக்கு ஒரே மகள். அவள் விஷ்வகர்மா வகுப்பில் ஒருவரை மணந்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். வேறு குலத்தில் மணம் முடித்த ஒரே பெண்ணை பெற்ற எங்களைப் போன்ற பெற்றோர்களின் சரம கைங்கர்யங்களை யார் செய்வார்கள்? அதற்கு என்ன விதிமுறைகள்?

.ப்ரபத்தியை முதலில் செய்துகொள்ளுங்கள். இந்தக் காலத்தில் விஷ்வகர்மா என்பதில் பல ஜாதிகள் கலந்து உள்ளன விஷ்வகர்மா என்பது வைச்யராக இருப்பின் (உபநயனம் முதலான ஸம்ஸ்காரம் உடையவராக இருப்பின்) அந்தப் பேரன் செய்யலாம். அது இல்லாத பக்ஷத்தில் உங்கள் இருவரில் முதலில் மனைவி மரணித்தால் கணவர் செய்யலாம். கணவர் மரணித்தால் மனைவியின் கைப்புல் வாங்கி வேறு நெருங்கிய ஆண் உறவினரோ வேறு எவரேனும் அந்தணரோ செய்யலாம். இருவரில் பின்னால் மரணிப்பவர்க்கு அந்தப் பெண்ணின் கைப்புல் வாங்கி வேறு ஒரு நெருங்கிய அந்தண உறவினர் அல்லது வேறு ஒரு அந்தணர் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top