எள்ளில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்தான் எண்ணெய். எண்ணெய் என்பது தற்காலத்தில் நாம் சொல்லக்கூடிய எள்ளெண்ணெய் மட்டும்தான் சொல்ல வேண்டும். இன்று எண்ணெய் போல் இருக்கும் மற்ற பதார்த்தங்களுக்கு, எண்ணெய் என்பது பொதுப்பெயராக ஆகிவிட்டதால் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் என்று அடைமொழியிட்டுச் சொல்கிறோம். வேறு எதுவும் சேர்க்காமல் நல்ல எண்ணெய் என்று எள்ளெண்ணெயைக் குறிப்பிடுகிறோம்.
அதேபோல்தான் ஸ்ரீஜயந்தி என்பது பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அவதார தினம்தான். ஆனால் ஸ்ரீ ஜயந்தி என்பது பொதுவாக எம்பெருமானின் அவதார தினம் என்று வந்ததினால் மற்ற அவதார தினங்களை மத்ஸ்ய ஜயந்தி, வராஹ ஜயந்தி, ந்ருஸிம்ஹ ஜயந்தி என்றும் இதை (ஸ்ரீ க்ருஷ்ண ஜன்ம தினத்தை) ஸ்ரீ ஜயந்தி என்றும் கூறுகிறோம்.