ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய காலக்ஷேபத்தில் எம்பார் வ்ருத்தாந்தம் பற்றி ஸ்வாமி சாதித்தார். அடியேனின் அகத்துக்காரர் ஆக்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்லை. அதற்கான அபராத க்ஷமாபனம் யாரிடம் ப்ரார்த்திக்க வேண்டும்? என்னுடைய ஆசார்யனிடமா அல்லது என் அகத்துக்காரரின் ஆசார்யனிடத்திலா?

ஆக்ஞா கைங்கர்யங்களைச் செய்யவில்லை என்றால், யார் செய்யவில்லையோ அவர்தான் அபராத க்ஷமாபனம் செய்யவேண்டும். அதைப் பண்ணுவதைக் காட்டிலும் தொடர்ந்து ஆக்ஞா கைங்கர்யகளைப் பண்ணவேண்டும் ஏனென்றால் அது நித்யம் பண்ணவேண்டிய கைங்கர்யம். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு நித்யம் அபராத க்ஷமாபனம் பண்ணுவதை ஶாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. ஆகையால் அதை ஆரம்பித்து தொடர்ந்து பண்ணுவதே முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top