பொதுவாக நம் அகங்களில் ஶரணாகதி பண்ணவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் பெரியளவில் பேதங்களெல்லாம் நமக்குத் தெரியாது. எல்லோரும் ஶராணாகதி பண்ணியிருக்கிறார்கள், எல்லோருக்கும் ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்று சொல்கிறோம். 13 நாள் கார்யங்கள் விசேஷமாகச் செய்கிறோம்.
ப்ரபந்நன் அல்லாதவர்களுக்கும் சுபம் முதலியவைகளெல்லாம் உண்டு. ப்ரபந்நர்களுக்குப் பண்ணுவதுபோல் சேவாகாலம் என எல்லாம் அவர்களுக்கும் பண்ணலாம் அதனால் தோஷம் கிடையாது. நம் வழக்கத்தை விடாமல் இருக்க ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்று போடுகிறோம். அவர் ஶரணாகதி பண்ணிக்கொள்ளவில்லையென்றால் அந்த ஆத்மாவிற்கு புனர்ஜன்மங்கள் எல்லாம் உண்டு.