அடியேனின் மகன் ஶ்ரீவைஷ்ணவர் ஒருவரை தண்டம் சமர்ப்பித்து அபிவாதனம் சொல்லிய பின் அவர் அபிவாதனத்திற்கு பதில், “ராமானுஜ தாசன்” என்று சொன்னாலே போதுமானது என்றார். இதில் எது சரி?

அபிவாதனம் பண்ணும் போது “இராமானுஜ தாசன்” என்று சொல்வது நல்லதுதான். ஆனால் கோத்ரம், சூத்ரம், வேதம், சாகை அதை அனுசரித்துதான் எல்லா அனுஷ்டானங்களும் வரும். அதாவது, சந்தியாவந்தனம், விவாகம், உபநயனம், சீமந்தம் என அனைத்தும் வரும். ஏனென்றால் சூத்ரத்திற்கு சூத்ரம் ஆவணி அவிட்டம் உட்பட எல்லோமே மாறுபடும். அவர்வர்களின் கோத்ரம், சூத்ரம் அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும் அதை மறக்கக்கூடாது. அதனால்தான் அந்தக் கோத்ரம், சூத்ரத்தைச் சேர்ந்தவன், ரிஷிகள் (இந்த ரிஷிகள் அனைவருமே மஹான்களான வைஷ்ணவர்கள்தான்) பெயர்கள் என சொல்லணும். இராமானுஜ தாசன் என்று இத்துடன்தான் சொல்லவேண்டும். இவைகளை விட்டால் நமக்கு சந்தியாவந்தனம், யக்ஞோபவீதத்திலிருந்து ஆரம்பித்து எந்த அனுஷ்டானமமே நிக்காது.
இராமானுஜதாசன் என்பது ஸாம்ப்ரதாயிகமானது. அபிவாதனம் வைதீகமானது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படாது இது போதும் அது வேண்டாம் என்று இல்லை. இரண்டுமே தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top