ஸமாஶ்ரயணம் ஆனபின்
ரொம்ப முக்கியமானது பகவானின் ப்ரசாதம் தவிர வேறு ப்ரசாதம் சாப்பிடக்கூடாது என்பது. வைஷ்ணவர்களின் க்ருஹத்தில் பகவானுக்கு ஆராதனம் பண்ண ப்ரசாதம்தான் சாப்பிடவேண்டும்.
எச்சில் தீட்டு கலந்த அஹாரங்கள் சாப்பிடக்கூடாது.
முடிந்தவரை சந்தியாவந்தனத்துடன், மந்த்ர ஜபங்களெல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கணும்.
இது போன்றவையெல்லாம் கடைபிடிக்க வேண்டியது.
பெண்களைப் பொறுத்தவரை கல்யாணம் என்பதுதான் உபநயன ஸம்ஸ்காரம் போன்றது. புருஷர்களுக்கு உபநயனமும், பெண்களுக்கு திருமணமும் ஆனபின்தான் தளிகைப் பண்ண ஆசார ரீதியான தகுதி உண்டாகும். அதற்கு முன் ஆசார ரீதியாக தளிகைப் பண்ணும் தகுதி வராது.