அடியேன் USA வில் வசிக்கிறேன். இங்கே இருக்கும் ஸ்த்ரீகள் ஒரு குழுவாக ஶ்ரீமத் சுந்தர காண்டத்தின் ஶ்லோகங்கள் கற்றுக்கொள்கிறார்கள். அடியேன் அகத்துப் பெரியவர்கள் ஸ்த்ரீகாள் ஶ்லோகம் சேவிக்கக்கூடாது என்றும் ஆனால் கதையை பாராயணம் செய்யலாம் என்று சொன்னதாக நினைவு. மேலும் ஆழ்வார்களின் ஈரச்சொற்களை சேவிக்கலாம் ஆனால் ரிஷிகளின் ஶ்லோகங்களை ஸ்த்ரீகள் சொல்லக்கூடாது என்றும் சொன்னதாக நினைவு, ஸ்த்ரீகள் சுந்தரகாண்ட ஶ்லோகங்களை கற்கலாமா? பாராயணம் செய்யலாமா?