ஸ்த்ரீகள் திருமணம் ஆகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாமா?

ஸ்த்ரீகள் திருமணமாகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் அப்படிப் பண்ணிக்கொள்வது பல குடும்பங்களில் வழக்கத்தில் இல்லை.
பெண்களுக்கு விவாஹத்திற்குப் பிறகுதான் வாழ்க்கை என்பது ஆரம்பமாகுகிறது. விவாஹத்திற்கு முன் பிறந்த க்ருஹம் என்பது அவள் பிறந்து வளர்ந்த இடம் என்பது மட்டும்தான். ஆனால் அவளின் புக்ககம் என்பதுதான் அவள் வாழப்போகும் குடும்பம். அதாவது தனது கணவன், இவளின் புத்ரர்கள் என்று அவர்களுடன் வாழப்போகிறாள் என்கிற படியாலே அப்புக்கக ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றுவது நல்லது என்பதற்காக, அதாவது வாழப்போகிற இடத்திற்கு அனுசரணையாக இருக்கவேண்டி விவாஹத்திற்கு முன் ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ணி வைக்க மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top