தசரத சக்ரவர்திக்கு ஶ்ரவணின் பெற்றோர் கொடுத்த சாபத்தால் புத்ர சோகம் ஏற்பட்டது என்று புரிகிறது. ஆனால் ஒரு தவறும் செய்யாத இராம பிரான் ஏன் தன் புத்திரர்களைப் பிரிந்து வாழ நேரிட்டது? தன் புத்திரர்கள் இராமாயண கதையைப் பாடும்போதுதான் அவர்களைப் பார்க்கும் பாக்கியத்தையே பெற்றார். ஏதேனும் இதற்கு காரணம் உள்ளதா? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.

தசரதற்குச் சாபத்தால் புத்திர சோகம் வந்ததென்றால் எல்லோருக்கும் அவ்வாறாக வரவேண்டிய அவசியமில்லையே. எத்தனையோ பேருக்கு அவரவர்களின் கர்மவசத்தால் அவ்வாறு ஏற்படுகிறது. பெருமாள் ஶ்ரீராமனுக்கு கர்மா கிடையாது, கர்மவசத்தால் வந்ததும் அன்று. அவர் அபிநய ரூபமாக பண்ணுகிறார் என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top