ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்கின்றனர் என்றால், அதைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளையில்லாமல் பல வண்ணங்களில் வஸ்த்ரங்கள் தரிக்கவேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டிருக்கிறது. குங்குமும் மஞ்சளிலிருந்து வந்தபடியால் அது விசேஷ மங்களமாக இருக்கிறது.