ஶ்ரீதேவி, பூமாதேவி பற்றி பல கதைகள் கேட்டுள்ளோம். ஶ்ரீதேவியின் திருவவதாரம்தான் ஸீதாதேவி, ருக்மிணி பிராட்டி என்றும்; பூமாதேவியின் திருவவதாரம்தான் ஆண்டாள், பத்மாவதி தாயார் என்றும், வராஹ அவதாரத்தின் மூலமும் பூமாதேவி பற்றி அறிகிறோம். ஆனால் நீளா தேவி பற்றி பெரிதாக கதைகள் இல்லையே. அவரைப் பற்றி அறிய கதைகள் ஏதேனும் உண்டா? நீளா தேவியை எந்தெந்த திவ்ய தேசங்களில் சேவிக்க முடியும்?

பத்மாவதி தாயாரும் ஶ்ரீதேவியின் அம்சம்தான். மேலும், நீளாதேவி பற்றியதான சரித்திரங்கள் ஹரிவம்ச புராணத்தில் இருக்கின்றன. அவர் க்ருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியாக அவதரித்தார் என்பதாக இருக்கிறது. அதை அனுசரித்து பல பாசுரங்கள் 4000 திவ்ய ப்ரபந்தத்தில் இருக்கிறது. திருப்பாவையிலேயே இருக்கிறது.
சில ஊர்களில் நீளாதேவியை சேவிக்கலாம். ஶ்ரீரங்கத்தில் சந்நிதி இருப்பதாகக் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top