யுத்தகாண்டம் ஸர்க்கம் 120 இல் சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்யும்போது தேவர்கள் வரும் ஸ்லோகம் இது: ததோவைஶ்ரவணோராஜாயமஶ்சபித்ருபிःஸஹ । ஸஹஸ்ராக்ஷஶ்சதேவேஶோவருணஶ்சஜலேஶ்வரः ।।6.120.2।। ஷடர்தநயந்ஶ்ரீமாந்மஹாதேவோவ்ருஷத்வஜः । கர்தாஸர்வஸ்யலோகஸ்யப்ரஹ்மாப்ரஹ்மவிதாம்வரः ।।6.120.3।। ஏதேஸர்வேஸமாகம்யவிமாநைஸ்ஸூர்யஸந்நிபைः । ஆகம்யநகரீம்லங்காமபிஜக்முஶ்சராகவம் ।।6.120.4।। இதில், வருணனை “வருணஶ்சஜலேஶ்வர” என்றும் சிவனை “ஶ்ரீமாந்மஹாதேவோவ்ருஷத்வஜ” என்றும் அழைக்கிறார் வால்மீகி. ஆனால் அதே யுத்தகாண்டம் ஸர்க்கம் 126 இல் பெருமாள் பிராட்டியிடம் சேதுவைக் காட்டும்போது: ஏததத்குக்ஷௌஸமுத்ரஸ்யஸ்கந்தாவாரநிவேஶநம் ।।6.126.19।। அத்ரபூர்வம்மஹாதேவःப்ரஸாதமகரோத்ப்ரபுः । “மஹாதேவ:ப்ரஸாத” என்று கூறுகிறார். இதில் மஹாதேவ சப்தத்தால் அழைக்கப்படுபபவர் சமுத்திர ராஜனான வருணன் என்று, கோவிந்தராஜர் போன்ற நம் சம்பிரதாயத்தைச் சேர்ந்த வியாக்கியானகர்த்தாக்கள் கூறி இருக்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டு ஸ்லோகங்களைச் சேர்த்து பார்த்தால் சற்று முரணாக உள்ளது. இவற்றை விளக்க வேண்டுகிறேன்.கொடுக்கப்படவில்லை?

இந்த ஶ்லோகங்களைச் சேர்த்துப் பார்த்தால் என்ன முரண் என்று சொல்கிறார் எனத் தெரியவில்லை. மஹாதேவ: என்று வருணனை கோவிந்தராஜர் சொல்லியிருக்கிறார். மஹாதேவ: என்றால் சிவனுக்கு பெயர் என்று இராமாயணத்தில் முன் ஶ்லோகத்தில் இருக்கிறது.
மஹாதேவ: என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. பெருமாளுக்கே இப்பெயர் உண்டு. ஶ்ரீ இராமன் சந்நிதியில் எழுந்தருளியிருந்த ஶ்ரீரங்கநாதருக்கு “மஹாதேவ:” என்று பெயர் என்று ஶ்ரீமத் இராமாயணத்திலேயே வரும். “மஹாதேவ:” என்றால் பெரிய தேவன் என்றும் சொல்லலாம்.
“அத்ரபூர்வம்மஹாதேவःப்ரஸாதமகரோத்ப்ரபுः” என்று சொல்லுமிடத்தில் – நான் இலங்கை வருவதற்கு முன்னர் மஹாதேவர் அனுக்ரஹம் பண்ணார் என்று சொல்லியிருக்கிறார். ஸமுத்ரராஜன்தானே உதவி செய்தது. ஆகையால் அவரைக் குறிப்பிட்டதாகவோ அல்லது வருணதேவனை குறிப்பிட்டதாகவோதான் இருக்கவேண்டும். என்னென்றால், சிவன் வந்து அனுக்ரஹம் செய்ததாக ஶ்ரீமத் இராமாயணத்திலும் இல்லை யாரும் அந்தக் கதையைச் சொல்லவில்லை. இங்கே வ்யாக்யாணத்திலும் மஹாதேவ: என்று வருணனைதான் சொன்னார் என்று தெளிவாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top