1. அடியேன் ஸாம வேதம் (த்ரஹ்யாயன சூத்ரம்) பரத்வாஜ கோத்ரம், வடகலை, ஶ்ரீ சந்நிதி சிஷ்யன். நம் ஸம்ப்ரதாயத்தில் கிடாம்பி, நடாதூர், நல்லான் சக்ரவர்த்தி,சேட்லூர் என்று தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக்கொள்கின்றனர். அடியேன் காரணம் கேட்டு அறிந்துகொண்டது இவை ஒருவரின் வேதம், கோத்ரம் சூத்ரம் பொருத்ததாகும். கிடாம்பி என்றால் ஆத்ரேய கோத்ரம் யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்ரம் என்றனர். அவ்வாறாக பரத்வாஜ கோத்ரம் சாமவேதம் த்ரஹ்யாயன சூத்ரத்திற்கு பெயருக்கு முன்னரோ/பின்னரோ என்ன சேர்க்கவேண்டும் என்று தெரிவிக்கவும் ஸ்வாமி.அடியேனின் பூர்வீகம் கும்பகோணம், அகத்து குலதெய்வம் ஒப்பில்லாப்பன். 2. எது என்று தெரியாத பக்ஷத்தில் அடியேனின் தாயார் வழி பெரியோர்கள் உபயோகிக்கும் சேட்லூர் என்ற பெயரை போட்டுக்கொள்ளலாமா?

கிடாம்பி, நல்லான் சக்க்ரவர்த்தி போன்றவையெல்லாம் கோத்ரம் சூத்ரம் மட்டுமல்லாமல் அவர்களுடைய பரம்பரை ஸம்பந்தப்பட்டதாக இருக்கும். இது போல் பிருதம் என்னயிருக்கும் என்று தெரிந்துகொள்ள முயற்சி பண்ணுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு 30 வருடம் முன் நடந்த கல்யாண பத்திரிக்கையைப் பாருங்கள், தங்களுடையதோ அல்லது தங்களின் அப்பா, பெரியப்பா, சித்தப்பா அவர்களுடைய பெரியவர்களின் பத்திரிக்கையில் நிச்சயம் இருக்கும். அதில் என்ன உள்ளதோ அதைப் போட்டுக்கொள்ளலாம்.
பொதுவாக தந்தை வழி பெயரைதான் போட்டுக்கொள்ளுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top