வெளியிலிருந்து ப்ரசாதம் சொண்டுவந்து எம்பெருமானுக்கு அம்சை பண்ணுவதென்பது கோவிலில் வழக்கமில்லை. ஏனென்றால், கோவில் ப்ரசாதம் என்பது அனைத்து மக்களாலும் ஸ்வீகரிக்கக்கூடிய ஒன்றாகும். வெளியிலிருந்து என்றால் அது எல்லோராலும் ஸ்வீகரிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் கோவிலில் உள்ளேயே திருமடைப்பள்ளியிலேயே ப்ரசாதங்களைத் தயார் செய்து அம்சை பண்ணவேண்டும்.