எல்லோரும் செய்யும் பாபத்திற்குப் பலன் ஒன்றுதான். ஆனால் ப்ரபந்நன் விஷயத்தில், ஒரு ப்ரபந்நன் தான் தெரிந்தே செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்தம் செய்தானானால் பெருமாள் அவனை க்ஷமிப்பான், பொறுத்துக்கொள்வான். இல்லையென்றால் அந்தப் பாபத்திற்கான பலனைச் சிறிதளவாவது காட்டி, துக்கப்படுத்தி, தன் திருவடியில் சேர்த்துக்கொள்வான்.