பொதுவாக அமாவாசை முதலிய தர்ப்பணங்கள் மாத்யாஹ்நிக காலத்திற்குப் பிறகு குதப காலத்திலோ அல்லது அபரான்ன காலத்திலோ செய்யவேண்டியவை. ஆகையால் அமாவாசை தர்ப்பணத்தை ப்ராத: சந்தியா, மாத்யாஹ்நிகம், திருவாராதனம் செய்துவிட்ட பிறகு செய்வது வழக்கம்.
சில சமயங்களில் அந்தக் காலம் வரை காத்திருக்க முடியாத பக்ஷத்தில் , அலுவலகம் செல்பவர்கள் இதே க்ரமத்தில் முன்னதாகவே செய்கின்றனர்.
மாசப்பிறப்பு பொருத்தவரை, சில சமயம் காலையிலேயே மாசம் பிறக்கும் அந்தச் சமயத்தில் சந்தியாவந்தனம் செய்து, மாசப்பிறப்பு தர்ப்பணம் செய்து பிறகு மாத்யாஹ்நிகம், திருவாராதானம் செய்யலாம். இதே மாசப்பிறப்பே மத்யான வேளையில் புண்ய காலம் பிறப்பதானால், அமாவாசை செய்யும் க்ரமத்திலேயே செய்யலாம்.
மாத்யாஹ்நிகம் என்பது மாத்யாஹ்நிக காலத்தில் செய்யவேண்டியது, சங்கவ காலத்தில் அதாவது சூர்யோதயமாகி ஒரு இரண்டரை மணி காலம் கழிந்த பிறகு செய்யலாம். அதுவும் முடியாத பக்ஷம், செய்யாமலே விடுவதைக் காட்டிலும் சூர்யோதயமான பிறகு, சூர்யனை பார்க்க முடியும் சமயத்தில் செய்யலாம்.