தேங்காய் மூடியைத் துருவி எடுக்காமல், பத்தையாக எடுத்து பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகித்து விட்டு மீதமுள்ள பத்தையை வேறு ஒரு நாள் பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா? அல்லது மொத்த தேங்காயையும் துருவி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா?

தேங்காய் முடியை ஒரு தடவை உடைத்துவிட்டால் அன்றைய தினம் பெருமாள் தளிகைக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதில் மீதமிருந்தால் (துருவியதோ, பத்தையாக எடுத்ததோ) அவற்றை மீண்டும் திருவாராதன தளிகைக்குச் சேர்க்கும் வழக்கமில்லை.
குறிப்புகள்:
இதை உபயோகிக்க வழியென்ன என்றால், இரவு வேளையில் திருவாரதனத் தளிகை என்ற ஒன்று பண்ணுவதில்லை, பெருமாளுக்கு அம்சை பண்ணுவது மட்டும்தான். ஆகையால் இரவு பண்ணும் தளிகையில் மீதமிருக்கும் தேங்காயை உபயோகப்படுத்தலாம், பாதகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top