தேங்காய் முடியை ஒரு தடவை உடைத்துவிட்டால் அன்றைய தினம் பெருமாள் தளிகைக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதில் மீதமிருந்தால் (துருவியதோ, பத்தையாக எடுத்ததோ) அவற்றை மீண்டும் திருவாராதன தளிகைக்குச் சேர்க்கும் வழக்கமில்லை.
குறிப்புகள்:
இதை உபயோகிக்க வழியென்ன என்றால், இரவு வேளையில் திருவாரதனத் தளிகை என்ற ஒன்று பண்ணுவதில்லை, பெருமாளுக்கு அம்சை பண்ணுவது மட்டும்தான். ஆகையால் இரவு பண்ணும் தளிகையில் மீதமிருக்கும் தேங்காயை உபயோகப்படுத்தலாம், பாதகமில்லை.