ஆடி மற்றும் தை அமாவாஸை அன்று எம்பெருமானுக்கு மாவிளக்கேற்றுவதானால், சிலர் திருஎவ்வுள் வீர்ராகவனுக்கு அன்றைய தினம் மாவிளக்கேற்றுவார்கள். அப்படியேற்றுவதானால் நிச்சயம் வாசலில் படிக்கோலம் போட்டு, எம்பெருமானுக்கு பண்டிகைத் தளிகை போல் பண்ணி அம்சை பண்ணலாம். சாதாரன அமாவாஸை அன்று படிக்கோலம் போடும் வழக்கமில்லை.
குறிப்புகள்:
சில க்ருஹங்களில் விளக்கேற்றும் வழக்கமில்லையென்றாலும், பண்டிகை போல் கொண்டாடும் வழக்கமிருக்கிறது. ஆகையால் அவரவர்கள் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.