பரந்யாஸம் ஆனவர்கள் தனியாக எந்தவித விரதமும் இருக்கவேண்டிய நியமமில்லை, ஏகாதசி, ஶ்ரீஜயந்தி, ஶ்ரவண துவாதசி முதலான நித்யமான விரதங்கள் தவிர. இவ்விரதமானது எம்பெருமான் திருவேங்கடத்தானைக் குறித்திருப்பதால் தவறொன்றுமில்லை.
பொதுவாக சனிக்கிழமையில் விரதமிருப்பவர்கள் துவாதசிக்கு பாதகமில்லாமல் காலையில் ஆஹாரம் சாப்பிட்டுவிட்டு சாயங்காலத்தில்தான் விரதமிருப்பார்கள். நீங்கள் சொல்லும்படி முழுமையாக விரதமிருப்பதாக இருந்தால் அன்று துவாதசி வந்துவிட்டால், துவாதசிதான் ப்ரதானம் என்று தோன்றுகிறது.