அடியேன் பகவத் ப்ரீத்யார்த்தமாய் திருவேங்கடத்தானைக் குறித்து சனிக்கிழமை விரதம் (பழம், பால்,அல்லது தேஹ பாங்கிற்கேற்ப கோதுமை பதார்த்தம் மட்டுமே) அனுஷ்டித்து வருகிறேன். எந்தக் குறிப்பிட்ட வேண்டுதலும் இல்லை. 1. பரந்யாஸம் ஆனவர்கள் இதைத் தொடரலாமா? 2. சனிக்கிழமை துவாதசி வந்துவிட்டால், ஏகாதசி விரதத்தை எப்படி முடித்துக் கொள்வது?

பரந்யாஸம் ஆனவர்கள் தனியாக எந்தவித விரதமும் இருக்கவேண்டிய நியமமில்லை, ஏகாதசி, ஶ்ரீஜயந்தி, ஶ்ரவண துவாதசி முதலான நித்யமான விரதங்கள் தவிர. இவ்விரதமானது எம்பெருமான் திருவேங்கடத்தானைக் குறித்திருப்பதால் தவறொன்றுமில்லை.
பொதுவாக சனிக்கிழமையில் விரதமிருப்பவர்கள் துவாதசிக்கு பாதகமில்லாமல் காலையில் ஆஹாரம் சாப்பிட்டுவிட்டு சாயங்காலத்தில்தான் விரதமிருப்பார்கள். நீங்கள் சொல்லும்படி முழுமையாக விரதமிருப்பதாக இருந்தால் அன்று துவாதசி வந்துவிட்டால், துவாதசிதான் ப்ரதானம் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top