சில சமயங்களில் கோவிலில் பெருமாள் சேவிக்கும் பொழுதோ, அல்லது உற்சவத்தில் பெருமாள் சேவிக்கும் பொழுதோ, அல்லது நம் க்ருஹத்தில் விசேஷ நாட்களில் த்ருப்தியாக திருவாராதனம் ஆகும் பொழுதோ, நம்மையும் அறியாமல் அவனுடைய கல்யாண குணங்களை நினைக்கும் பொழுது, நம் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது, இது அழுகை என்று கருதப்படுமா, கோவிலில் அல்லது பெருமாள் முன்னால் அழக் கூடாது என்று ஸாஸ்திரங்கள் சொல்கின்றன, இது அபசாரம் ஆகி விடுமா? அதே போல் ஆழ்ந்து நம் பிரார்த்தனையை அவன் ஸன்னதியில் அவனிடம் விண்ணப்பம் செய்யும்போது நம்மையும் அறியாமல் நம் கண்கள் முடிகிறது, இதுவும் அபசாரமா?

பெருமாள் சந்நிதி முன் பகவத் குணங்களில் ஈடுபட்டு, கண்களில் ஜலம் வந்தால், அது ஒரு விசேஷமான பக்தியின் வெளிப்பாடு என்று சொல்லியிருக்கிறது. மற்ற காரணத்திற்காக அழுவதுபோல் கிடையாது, இது ஒரு பக்தியின் வெளிப்பாடு ஆகையால் அது தோஷமாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top