மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணத்திற்குப் பின் பெருமாள் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?

நீங்கள் எந்தப் பெருமாள் ப்ரசாதம் பற்றி கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. மஹாளயபக்ஷம் தர்ப்பணம் முடிந்தபின் அகத்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணிய ப்ரசாதம்தான் ஸ்வீகரிக்க்ப்போகிறோம்.
கோயில் பெருமாள் ப்ரசாதம் என்றால், தர்ப்பணத்திற்குப் பின் பலகாரம் என்றிருக்கிறது. அது பலகாரமாக இருந்தால், சாப்பிடலாம். அதல்லாது புளியோதரை, தத்யோன்னம் போன்ற ப்ரசாதமாக இருந்தால் அதை ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை. இதுவும் பகலில் கூடாது. பகலில் ஒருவேளை சாப்பாடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இரவு வேளையில் விரதம் சொல்லப்பட்டிருக்கிறது. இயலாதவர்களுக்குப் பலகாரம், ப்ரசாதமாக இருந்தால் (சாதம்) அதை ஸ்வீகரிக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top