வேலை காராணமாக நாங்கள் வேறு நகரத்திலும் என் மாமியார் மாமனார் வேறு நகரத்திலும் இருக்கின்றோம். எனது கணவரும் எனது தந்தையும் நித்யமும் சாளக்கிராம திருவாராதனம் செய்வார்கள். என் புக்கத்திலோ அல்லது பிறந்தகத்திலோ நாங்கள் மாவிளக்கு போடுவோம். ஆனால் இம்முறை வேறு நகரத்தில் இருப்பதால் என்ன செய்வது? நாங்கள் இருக்கும் அகத்திலும் ஏற்றாலாமா? அதாவது இரண்டு அகத்திலும் (புக்ககம் மற்றும் நாங்கள் இருக்கும் நகரம்) மாவிளக்கு ஏற்றலாமா?

இக்கேள்வி கேட்டவர்களின் மாமனார் மாமியார் நீங்களும் தனியாக ஏற்றலாம் என்று சொன்னால்,தனியாக ஏற்றலாம். இல்லை பெரியவர்கள் நாங்கள் ஏற்றுகிறோம் அதுவே போதும் என்று சொல்லிவிட்டால் அப்படியே பின்பற்றுவது. அகத்துப் பெரியவர்கள் சொல்படி நடந்துகொள்வது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top