ஸ்த்ரீகள் ஒற்றை திருமண்தான் தரிக்கலாமா? அல்லது ஒற்றை திருமணுடன், கூடுதலாக அவர்கள் நெற்றி வகுடுக்கு கீழ் குட்டி திருமண், மற்றும் கழுத்து, கைகளிலும் ஸாற்றிக் கொள்ளலாமா? சில பெரியோர்கள் கழுத்தில் குங்குமம் வைத்துக்கொண்டால் பிறந்த வீட்டு சுபிக்ஷம் குறைந்து விடும் என்று குறிப்பிடுகிறார்கள். ஸ்வாமி தேஶிகர், ஆசாரியர்கள் கூறியுள்ள ஸ்த்ரீகளளுக்கான திருமண் காப்பு நியமங்களை உபதேஸித்து அருளவும்.

ஸ்த்ரீகளுக்கு ஸமாஶ்ரயணம் ஆகும்போது 12 திருமண் இட்டுக்கும்படியாக ஆசார்யன் நியமித்து, அதன் திருநாமங்களையும் சொல்லிக்கொடுப்பார்.
தினந்தோறும் அப்படியிட்டுக்கொள்வது சற்று ஶ்ரமஸாத்யமாக (கஷ்டப்பட்டு செய்யவேண்டி) இருக்கும் என்பதாலும், காலை வேளையில் ஸ்த்ரீகளுக்கு வேறு காரியங்கள் இன்னும் ப்ரதானமாக இருக்கும் என்பதாலும் அதை தினந்தோறும் தரித்துக்கொள்ளும் வழக்கமில்லை. கூடாதென்பது இல்லை, பெரியவர்கள் வழக்கத்தில் இல்லை.ஒரு திருமண் இட்டுக்கொள்வதென்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top