ஸ்த்ரீகளுக்கு ஸமாஶ்ரயணம் ஆகும்போது 12 திருமண் இட்டுக்கும்படியாக ஆசார்யன் நியமித்து, அதன் திருநாமங்களையும் சொல்லிக்கொடுப்பார்.
தினந்தோறும் அப்படியிட்டுக்கொள்வது சற்று ஶ்ரமஸாத்யமாக (கஷ்டப்பட்டு செய்யவேண்டி) இருக்கும் என்பதாலும், காலை வேளையில் ஸ்த்ரீகளுக்கு வேறு காரியங்கள் இன்னும் ப்ரதானமாக இருக்கும் என்பதாலும் அதை தினந்தோறும் தரித்துக்கொள்ளும் வழக்கமில்லை. கூடாதென்பது இல்லை, பெரியவர்கள் வழக்கத்தில் இல்லை.ஒரு திருமண் இட்டுக்கொள்வதென்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது.