மாத ஸங்க்ரமணத்திற்குப் புண்யகால சமயங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. விஷுவிற்கு 20 நாழிகை மற்றும் 10 நாழிகை என்றும், விஷ்ணு பதிக்கு 16 நாழிகை என்றும் ஷடசீதிக்கு 60 நாழிகை என்றும். இரவில் ஸங்க்ரமணம் ஏற்பட்டால் முன் இரவானால் முன் தினமும் பின் இரவானால் மறு தினம் தர்ப்பண காலம் என்று. இவை அனைத்தும் விஷு மற்றும் விஷ்ணுபதிகளில் புரிந்து கொள்ள முடிகிறது. ஷடசீதிக்கு வரும் போது மாதம் பிறந்த பிறகு 60 நாழிகையை எப்படிப் புரிந்து கொள்வது? பகல் 30 பொழுது நாழிகையே, இரவென்றால் அதற்கு வேறு நியமம். சற்று தெளிவிக்க ப்ரார்த்தனை.

பூர்வ இராத்தியில் ஸங்க்ரமணமாக இருந்தால் அன்றே புண்யகாலம், தர்ப்பணாதிகள் அன்றே பண்ணவேண்டும். அபர இராத்திரியில் ஸங்க்ரணமாக இருந்தால் தர்ப்பணாதிகள் மறுநாள் பண்ணவேண்டும். மத்திய இராத்திரியில் இருந்தால் இரண்டு நாளும் பண்ணலாம் என்று ஒரு வசனம் இருக்கு. அதிலும் மத்திய இராத்திரியாக இருந்து, ஷடசீதியாக இருந்தால் தர்ப்பணம் மறுநாள்தான் பண்ணவேண்டும். இந்த நியமத்திற்கு அபவாதமாக இரண்டு அயனம்தான் வரும். தஷிணாயனமாக இருந்தாலும், உத்தராயணமாக இருந்தாலும் தர்ப்பணம் உத்தராயணத்தில்தான் பண்ணவேண்டும்.
பாக்கி மாதங்களிலெல்லாம் ஷடசீதியாக இருந்தாலும், பூர்வ இராத்திரியாக இருந்தாலும் – பூர்வ இராத்திரியில் ஸங்க்ரமணம் இருந்தால் மத்யானத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும் [மத்யானாந் உபரி க்ரியா என்ற வசனத்தின்படி].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top