பூர்வ இராத்தியில் ஸங்க்ரமணமாக இருந்தால் அன்றே புண்யகாலம், தர்ப்பணாதிகள் அன்றே பண்ணவேண்டும். அபர இராத்திரியில் ஸங்க்ரணமாக இருந்தால் தர்ப்பணாதிகள் மறுநாள் பண்ணவேண்டும். மத்திய இராத்திரியில் இருந்தால் இரண்டு நாளும் பண்ணலாம் என்று ஒரு வசனம் இருக்கு. அதிலும் மத்திய இராத்திரியாக இருந்து, ஷடசீதியாக இருந்தால் தர்ப்பணம் மறுநாள்தான் பண்ணவேண்டும். இந்த நியமத்திற்கு அபவாதமாக இரண்டு அயனம்தான் வரும். தஷிணாயனமாக இருந்தாலும், உத்தராயணமாக இருந்தாலும் தர்ப்பணம் உத்தராயணத்தில்தான் பண்ணவேண்டும்.
பாக்கி மாதங்களிலெல்லாம் ஷடசீதியாக இருந்தாலும், பூர்வ இராத்திரியாக இருந்தாலும் – பூர்வ இராத்திரியில் ஸங்க்ரமணம் இருந்தால் மத்யானத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும் [மத்யானாந் உபரி க்ரியா என்ற வசனத்தின்படி].