“1) எங்கள் வீட்டில் வளரும் துளசிச் செடியில் இருந்து கிடைக்கும் இலைகளை நான் பெருமாளின் திருவாராதனத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். ஜலதோஷத்திற்கு மருந்தாகத் துளசி கஷாயம் போட பயன்படுத்துவதில்லை. இதனால் என் குடும்பத்தினருக்கு என் மீது சற்று வருத்தம். நான் செய்வது சரியா, அல்லது சிறிது துளசி இலைகளைக் கஷாயம் போட பயன்படுத்தலாமா? 2) ஒரு உறவினர் அல்லது தெரிந்தவரின் இறப்பிற்குப் போகும்போது, நம் திருமண் அழியாமல் இருக்கும் பட்சத்தில் நாமே நம் திருமண்ணை அழிக்க வேண்டுமா?.

1. துளசியைப் பறிப்பதற்கென்று இருக்கும் காலத்தில் பறித்துவைத்துக்கொண்டு, எம்பெருமான் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட அதே துளசியை கொண்டே கஷாயாமாகப் போடலாம், தவறில்லை. இல்லையென்றால் ஒரு செடியை எம்பெருமான் திருவாராதனத்திற்கும் மற்றொரு செடியை மருந்திற்கும் உபயோகிக்கலாம். ஆனால் துளசியை அந்தக் காலத்தில்தான் பறிக்கவேண்டும்.
2. துக்கம் விசாரிக்க திருமண்ணை அழிக்கவேண்டுமென்றில்லை. திருமண்ணோடே போகலாம், தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top