நாம் பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் எந்தச் சுப கார்யமும் ஏன் செய்வதில்லை? எம்பெருமான் அவ்விரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துதானே இராம க்ருஷ்ணாதி அவதாரங்களை எடுத்தார். அப்படியிருக்க அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள்தானே. குறிப்பாக இவ்விரண்டு நாட்களைத் தவிர்ப்பதன் காரணம் என்ன என்று விள்ளக்கவும்.

அஷ்டமி, நவமியில் சில காரியங்கள் பண்ணலாம், சில காரியங்கள் பண்ணுவதில்லை என்பதெல்லாம் ஜோதிஷ ஶாஸ்த்ரம். எம்பெருமானின் திருவவதாரம் என்பது வேறு. அவன் திருவவதாரம் பண்ணியதால் அனைத்து அஷ்டமியும் நவமியும் நல்லது என்றில்லை. அஷ்டமி நவமி தினத்தில் ஜோதிஷ ஶாஸ்த்ரத்தை அனுசரித்து நல்ல காரியங்களைப் பண்ணுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top