சிலர் பட்டு வஸ்த்ரம் உடுத்திக் கொண்டு செய்வார்கள். அது பெரியோர்கள் வழக்கத்தில் இல்லை. முடிந்த வரை தவிர்ப்பது உசிதம். ஆனால், சுத்தமான வஸ்த்ரம் உடுத்திக்கொண்டுதான் பண்ண வேண்டும்.
தர்ப்பணம் உட்கார்ந்து கொண்டுதான் பண்ணவேண்டும். முடியாத பக்ஷத்தில், ஏதாவது பலகை அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டு மேடை மேல் நாம் சேர்க்கும் ஜலம் கீழே நம் காலில் படாதபடி பண்ணவேண்டும்.