வடகலையார் 4 முறையும், தெங்கலையார் ஒருமுறையும் சேவிப்பதன் காரணம் என்ன? மேலும் திருமண் தரிக்கும் முறையின் பேதத்தின் காரணமும் என்ன? என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்வாமி தேஶிகன் பாஞ்சராத்ர ஆகம ப்ரமாணங்களையெல்லாம் எடுத்து 4 தடவை சேவிக்கவேண்டும் என்பதாக நிரூபணம் பண்ணியிருக்கிறார். அதேபோல் திருமண்ணும் இவ்வாறு இட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அது எத்தனை நீளம், அகலம் என்பதையும் பாஞ்சராத்ர ஶாஸ்த்ரபடி ஸச்சரித்ர ரக்ஷா என்ற க்ரந்தத்தில் எழுதியுள்ளார். அந்த ரீதியில் ஆகமப்படி ஸ்வாமி தேஶிகன் எடுத்துக்காட்டியதை வடகலையார் பின்பற்றிவருகின்றனர்.
தெங்கலையாருடைய ஸம்ப்ரதாயத்தின் மூலத்தை அந்த ஆசார்யர்களிடம்தான் கேட்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top