நித்யம் ஒவ்வொரு அனுஷ்டானத்தின் போது சொல்லவேண்டிய ஶ்லோகங்களெல்லாம், அதாவது சந்தியாவந்தனத்திற்கு முன் சொல்லும் ஶ்லோகம் அதன் ப்ரயோகத்திலேயே இருக்கிறது. ஒவ்வொரு சங்கல்பத்திலும் “ஶுக்லாம் பரதரம்” சொல்லவேண்டும் என்பதெல்லாம் அந்தந்த அனுஷ்டானத்திலேயே வரும்.
வேறு லௌகீக செயல்கள் என்றால், தூங்கி எழும்போது “ஹரி” நாமம் சொல்லவேண்டும் என்றும், உண்பதற்கு முன் “கோவிந்த” நாமம் சொல்லவேண்டும். மற்றபடி அந்தந்த அனுஷ்டானத்தின்போது அந்தந்த அனுஷ்டானத்தில் வரும் ஶ்லோகங்களைச் சொல்லவேண்டும்.