ப்ரயாக்ராஜ்ஜில் தீர்த்தமாடும் முன் வெளியில் தீர்த்தமாடிவிட்டு அங்கு தீர்த்தமாடலாம். அப்படியில்லையென்றால் அங்கேயே தீர்த்தமாடிவிட்டு பின் சங்கல்பம் செய்து மீண்டும் தீர்த்தமாடலாம். ஶ்ராத்த திதி இல்லாவிட்டாலும் தர்ப்பணாதிகள் செய்வது அவ்வூரின் வழக்கமாக இருக்கிறது. அதற்கு சில வசனங்களும் இருக்கிறது. நம் பெரியவர்கள் அவ்வாறு செய்ததாக இல்லை. ஆகையால் தீர்த்தமாடிவிட்டு வரலாம் என்று தோன்றுகிறது.