ப்ரதோஷ காலத்தில், அஸ்தமனகாலம் முன் ஒன்றரை மணி காலத்திற்கும், பின் ஒன்றரை மணி காலத்திற்கும் (3 மணி காலம்) மௌன வ்ரதம் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியவர்கள், ஆசார்யர்கள் இருந்திருக்கிறார்கள். அதேபோல் அக்காலத்தில் சாப்பிடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முடிந்தால் இவற்றை செய்யலாம். பாடங்கள், காலக்ஷேபங்கள், ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், வேதாத்யயனங்கள் இவையெல்லாம் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் நியமம்
ஞானம், விக்ஞானம், பரக்ஞானம் என்ற மூன்றும் ஒவ்வொரு இடத்திலும் அதாவது ஶ்ரீமத் பகவத் கீதை, வேதம் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்த இடத்தில் குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று தெரிவிக்கவும்.
ஸ்வாமி தேஶிகன், திருவடி பற்றி தேவநாயக பஞ்சாஶத், பகவத் த்யான ஸோபானம் என்று பல இடங்களில் ஶ்லோகங்கள் பாடியுள்ளார். பாதுகா ஸஹஸ்ரம் மாதிரி தனியாகப் பண்ணவில்லையென்றால், திருவடி அந்த மாதிரி பண்ணிவைக்கவில்லை. ஒவ்வொரு ஸ்தோத்ரமும் அந்தந்தப் பெருமாள் தானே தேஶிகனைக் கொண்டு பண்ணிவைக்கிறார்.