ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் 9வது ஸ்கந்தத்தில் அம்பரீஷ வயாக்யானம் மற்றும் த்வாதசி பாரணை துர்வாச முனிவர் மற்றும் ஜலபாரணை குறித்தம் வருகிறது. ஜலபாரணை செய்ததால் முனிவர் கோபம் கொண்டு சபிக்க சக்ராயுதம் அவரைத் துரத்த எல்லோரும் ப்ரம்ம ருத்ராதிகளும் கூட அவரைக் கைவிட்டதால் எம்பெருமானின் கட்டளைப்படி பக்தனிடமே வந்து சரண்டைந்து அம்பரீஷன் சகராயுதத்தை வேண்ட முனிவர் காப்பாற்றப்பட்டார். அடியேனுடைய இதில் ஒரு சம்சயம், ஒரு ஆண்டிற்குப்பிறகுதான் துர்வாசர் அம்பரீஷனிடம் திரும்பி வந்து கேட்டார் என்றும், மன்னனும் பாரணை செய்ததாக கூறப்பட்டள்ளது. ஒரு வருடகாலம் பல ஏகாதசி துவாதசி வந்திருக்குமே.

ஆமாம் ஒரு வருட காலத்திற்கு பல ஏகாதசி, துவாதசி வந்திருக்கும். ஆனால் அம்பரீஷனைப் பொறுத்த வரை ஒரு வருடம் வரை துவாதசி பாரணை ஆகவில்லை. இது வைபவ விசேஷம். சாதாரண கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top