ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா?

ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாளுக்கு தளிகை சமர்பிக்கலாம், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்புகள்:
புருஷர்கள் போல் மணி ஸேவித்து தளிகை சமர்பிக்ககூடாது.; ஆனால் பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்காது க்ரஹிக்கவும் கூடாது
ஆகையால் ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாள் ஸந்நிதியில் தளிகை ஸமர்ப்பணம் செய்வித்து, ஸேவித்து விட்டு – பெருமாள் அம்சையாவதாக மனதார நினைக்க வேண்டும். இதுவே அனுஷ்டானத்தில் இருக்கும் வழக்கம்.
ஆத்தில் என்ன தளிகைப் பண்ணுகின்றோமோ அதை, ஆண்டாளின் “கூடாரை வெல்லும் சீர்” பாசுரம் சொல்லி மானசீகமாய் பெருமாளுக்கு அம்சை பண்ணிவிட்டு ஸ்வீகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top