க்ரஹண காலத்தில் ஆறு காரியங்கள் செய்ய வேண்டும். இதில்,
உபவாஸம்
ஸ்நானம்
புண்ய கர்மம்
என்ற மேல் கூறிய மூன்றும் ஸ்த்ரீகள், பாலகர்களுட்பட எல்லாருக்குமானவை.
தர்ப்பணம் (ஆஶௌசம் வந்திருந்தால் கூட இந்த தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும்)
தானம்
ஆராதனம்
ஆகிய மூன்றும் யாருக்கெல்லாம் ப்ராப்தம் உண்டோ அவர்களுக்கானவை.
குறிப்புகள்:
சூர்ய/சந்திர என இரு க்ரஹணங்களுமே நமக்கு கிடைக்கும் அரிய புண்ணிய காலம். இதை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உபவாஸம்
சூர்ய க்ரஹணமென்றால், க்ரஹண காலம் ஆரம்பிக்கும் 12 மணி நேரம் முன்பும், சந்திர க்ரஹணமென்றால், க்ரஹண காலம் ஆரம்பிக்கும் 9 மணி நேரம் முன்பு பட்டினி இருக்க வேண்டும். க்ரஹண காலத்திற்கு முன் பண்ணிய அன்னம் முதலியவற்றை க்ரஹண காலம் பின்பு சாப்பிடக்கூடாது, ஊறுகாய், அப்பளம் போன்ற ஸ்திரகாலஸ்தாயியான வஸ்துக்கள் க்ரஹண காலத்திற்கு முன் தர்ப்பையிட்டால் அன்றி ஏற்க உகந்தவை அல்ல.
ஸ்நானம்
க்ரஹண புண்யகால ஸ்நானம் க்ரஹணம் ஆரம்பித்தவுடன் செய்யும் ஸ்னானம், இந்த ஸ்நானதிற்கு புண்ணியமதிகம், கங்கா ஸ்நான பலன் கிட்டும்.
க்ரஹணம் பின்பு பீடா நிவ்ருத்திக்காக இந்த ஸ்நானம் செய்ய வேண்டும்.
புண்ய கர்மம்
சாஸ்த்ரம் கூறுகிறது, இக்காலத்தில் செய்யும் ஜபங்களுக்குப் புண்ணியமதிகம், மந்திரோபதேசம் பெற்ற மந்திரங்களை ஜபித்து, சிறார்கள் ஸ்தோத்ர பாடம் முதலியவற்றை அனுஸந்தித்து அதிக பலன் பெறலாம்.
இப்படியாக என்னவெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை முழுமையாக அறியவும், சாஸ்த்ரம் கூறும் எண்ணற்ற க்ரஹணகால பலன்களை மேலும் தெரிந்துக்கொள்ளவும் கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்.