ஒரு உபன்யாஸத்தில் சீதை சந்தியாவந்தனம் செய்ததாகவும் வேதம் கற்றதாகவும் கேட்டேன். மற்ற யுகங்களில் பெண்கள் இவ்வாறு செய்தார்கள் என்றால், ஏன் கலியுகத்தில் அது தொடராது மாறுபட்டுள்ளது? எதனால் இந்த தடை வந்தது? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்

பிற யுகங்களை விட, பொதுவாக கலியுகத்தில் ஞானமும் சக்தியும் ஆசாரமும் ஶ்ரத்தையும் குறைவுபடும் என்பதால் சிலவற்றைக் குறைத்து சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது.
உதாஹரணமாக தபஸ், யாகம் முதலியவை, கலியுகத்தில் குறையலாம். அதே போல், ஸ்த்ரீகளும் சந்தியாவந்தனம் முதலியவற்றைக் குறைத்து, ஜபம், ஸ்தோத்ரம் முதலியவற்றைச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top