பெண்களின் ரஜஸ்வலா காலத்தில் அவர்களுக்குப் பதில் வேறொருவர் தளிகை செய்து ஆத்து பெருமாளுக்கு அமுது செய்வர். அந்த காலத்தில் பெருமாள் அமுதுண்ட தளிகையை ஸ்த்ரீகள் க்ரஹிக்கலாமா? இல்லை தனியாக அவர்களுக்கென்று தளிகை செய்ய வேண்டுமா?

பெண்களுடைய ரஜஸ்வலா காலத்தில் ஆத்துப் பெருமாளுக்கு அம்சை பண்ணிய ப்ரசாதத்தை, பெரியவர்கள் எல்லோரும் உட்கொண்ட பின் அவர்களுக்குக் கொடுக்கலாம் அதில் ஒன்றும் தவறில்லை.
குறிப்புகள்:
அவர்கள் உண்ட ப்ரசாதத்தின் மீதியை மறுபடியும் உள்ளே கொண்டு வந்து பரிஷேசனம் பண்ணவோ அல்லது சாப்பிடவோ, கூடாது. அது சேஷம் எனப்படும்.
முடிந்தவர்கள் அவர்களுக்கென்று தனித் தளிகை செய்வது உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top