பெண்கள் அடியேன், தாஸன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா? சம்பந்தப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேறு ஏதேனும் சொற்றொடர்கள் உள்ளனவா? நீண்ட காலமாக, இதை யாரிடம் கேட்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். எனவே எனது சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். தன்யோஸ்மி

நான் என்று சொல்வதைப் போல, அடியேனும் இருபாலருக்கும் பொதுவானதாகும்.
ஆண்பால் பெண்பால் இருவருமே அடியேன் என்று சொல்லுவது உசிதமாக இருக்கும். அடியேன், என்பது தன்னைக் குறிக்கக்கூடிய ஒரு வார்த்தை. மற்றவரைக் குறிப்பிடும்போது அடியாள் அல்லது அடியான் என்று சொல்ல வேண்டும்.
குறிப்புகள்:
தாஸன் என்றச் சொல்லுக்குப் பெண்பால் சொல் தாசியாகும். ஆனால் தற்காலத்தில் வேறொரு அர்த்தத்தை குறிப்பதால் அது உபயோகப் படுத்துவதில்லை.
திருமங்கையாழ்வார் அடிச்சி என்றும் சொல்லியிருக்கிறார். அதுவும் தற்காலத்தில் வழக்கில் இல்லை.
ஸம்ஸ்க்ருதத்தில் தாஸ: என்ற சொல் இருபாலரையும் சேர்த்துக் குறிக்கும், அதனால் வைதீக வ்யவஹாரங்களில் இதைப் பயன்படுத்துவதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top