நான் என்று சொல்வதைப் போல, அடியேனும் இருபாலருக்கும் பொதுவானதாகும்.
ஆண்பால் பெண்பால் இருவருமே அடியேன் என்று சொல்லுவது உசிதமாக இருக்கும். அடியேன், என்பது தன்னைக் குறிக்கக்கூடிய ஒரு வார்த்தை. மற்றவரைக் குறிப்பிடும்போது அடியாள் அல்லது அடியான் என்று சொல்ல வேண்டும்.
குறிப்புகள்:
தாஸன் என்றச் சொல்லுக்குப் பெண்பால் சொல் தாசியாகும். ஆனால் தற்காலத்தில் வேறொரு அர்த்தத்தை குறிப்பதால் அது உபயோகப் படுத்துவதில்லை.
திருமங்கையாழ்வார் அடிச்சி என்றும் சொல்லியிருக்கிறார். அதுவும் தற்காலத்தில் வழக்கில் இல்லை.
ஸம்ஸ்க்ருதத்தில் தாஸ: என்ற சொல் இருபாலரையும் சேர்த்துக் குறிக்கும், அதனால் வைதீக வ்யவஹாரங்களில் இதைப் பயன்படுத்துவதுண்டு.