எந்த கைங்கர்யமானாலும், அதைக் கைங்கர்யமாக பண்ணோமேயானால் பெருமாளுக்குக் கட்டாயம் அது ப்ரீதியைக் கொடுக்கும்.
குறிப்புகள்
நித்ய கர்மானுஷ்டானத்திலிருந்து ஆரம்பித்து, தானமோ, தர்ம கார்யமோ என அனைத்து காரியங்களையுமே, ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் என்று சொல்லிச் செய்தோமேயானால் கட்டாயமாக எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும்.
தர்மகார்யம் என்றாலே எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும், அதுவும் அந்த எண்ணத்தில் செய்ய மேலும் மேலும் அவனுக்கு ப்ரீதி அதிகமாகும்.