ஶ்ரவண விரதத்தின் மகிமை என்ன? எப்படிக் கடைபிடிக்க வேண்டும் (வ்ரத அனுஷ்டானம் யாது)?

திருவோணம் என்பது எம்பெருமானுடைய திருநக்ஷத்ரம். அவருக்கான வ்ரதம் என்று புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது.
எம்பெருமானுக்காக இருக்கக்கூடிய வ்ரதமாகியபடியாலும், எம்பெருமானுடைய அனுக்ரஹத்தினால் சகல காரியங்களையும் சாதித்துக்கொடுக்க கூடியதனாலும், விசேஷமாக கருதப்படுகிறது.
எப்படி அனுஷ்டிப்பது:
அந்தத் தினத்தில், சுத்தியாக இருந்து எம்பெருமானுடைய ஸ்தோத்ரங்கள் தயா ஶதகம் பாராயணம், நாம கீர்த்தனைகள் பண்ண வேண்டும்.
வ்ரத தினத்தில் கேளிக்கைகள் மற்றும் போக்ய விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
திருவேங்கடமுடையான் ஒப்பிலியப்பனுகாக இருப்பார்கள். ஒப்பிலியப்பனுக்காக அனுஷ்டிக்கும்போது ஆகாரத்தில் உப்பு சேர்க்கக்கூடாது.
வ்ரத தினத்தன்று ஒரு வேளை மட்டுமே ஆகாரம் உண்ண வேண்டும். சாயங்கால வேளையில் வேண்டுமென்றால் பலகாரம் செய்யலாம்.
ஏகாதசி வ்ரதம் போல் நிர்பந்தமாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top