ஸ்த்ரீகள்/ கைம்பெண்கள் சாளக்கிராம ஆராதனை செய்யலாமா? இன்றைய கால நடைமுறையில் ஶரணாகதி ஆன ஸ்தீரிகள், திருவாராதன சமயத்தில் மனோவாக்காயத்தினால் செய்ய வேண்டிய கர்மங்களை, தயை கூர்ந்து சாதிக்கவேண்டும்.

பெண்கள் சாளக்கிராமத்தைத் தொட்டு ஆராதனம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் திருவாராதன காலத்திற்கு உரிய ஒத்தாசைகள் அனைத்தும் கட்டாயம் செய்யலாம்.
குறிப்புகள்
அதாவது திருவாராதன சந்நிதியை நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்து கோலமிடுவதும், அதே போல் திருவாராதன மேடையையும் சுத்தம் செய்து கோலமிடுவதும், திருவாராதன பாத்திரங்களைச் சுத்தம் செய்வதும், விளக்கேற்றி வைப்பதும், புஷ்பம் (முடிந்தால் புஷ்பத்தை நாரில் தொடுப்பது) பழம் முதலியவற்றைச் சேகரித்து வைப்பதும், பெருமாள் தீர்த்தத்தில் சேர்க்க வேண்டிய பரிமளங்களைத் தயாரித்து வைப்பதும் (பரிமளங்கள் என்றால் ஏலக்காய் பச்சை கற்பூரம் முதலியவற்றை அரைத்து வைப்பது குங்குமப்பூவை இழைத்து வைப்பது என்பவையே.), தூபங்கள் ஏற்பாடு செய்வதும் போன்ற கைங்கர்யங்கள் செய்யலாம்.
இதை விட மிக முக்கியமானதாக எம்பெருமானுக்கு போஜ்யாசனத்தில் சமர்பிக்கப்பட வேண்டியத் தளிகையை மிகவும் சுத்தமாகவும், சாஸ்த்ரோக்தமாகவும் (சரீர சுத்தி, இட சுத்தியுடன்), ஆழ்வார் பாசுரங்கள், பூர்வாசார்யர்கள் ஶ்லோகங்கள், சொல்லிக்கொண்டு ஶ்ரத்தையாக கைங்கர்ய பாவத்துடன் தயாரித்து, தளிகை சமர்பிக்கும் சமயத்தில் கொடுக்க வேண்டியது ஸ்த்ரீகளின் முக்கிய கடமையாகும்.

பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள்
(கேள்விகளும் – பதில்களும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top